திமுக அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது

திருநெல்வேலியில் கடந்த ஆண்டு பருவமழையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை. கணேசராஜா வழங்கினார். மேலும் கரூர் சம்பவத்தில் ஆளும் திமுக அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டு 2024 டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையினால் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மாநகரில் வெள்ளப்பெருக்கினால் பல நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் முழ்கி மக்கள் பெரும் துயர பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கு முக்கிய காரணம் நீர்வழி போக்குவரத்தை முறையாக தூர்வாரி பராமரிக்காததே காரணம். அதேபோல் இந்த ஆண்டும் மக்களுக்கு பேராபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக
திருநெல்வேலி, பாளையங்கோட்டை மாநகர் பகுதிகளில் பருவ மழை வருவதற்கு முன்பு பொதுமக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியர் சுகுமார் யிடம் அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை. கணேசராஜா கழக நிர்வாகிகளுடன் மனு அளித்தார்.

தொடர்ந்து இதுகுறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:-

திருநெல்வேலியில் மழைக்கால முன்னேற்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் சுகுமார்யிடம் மனு கொடுத்துள்ளோம்.
தற்போது இரண்டு நாள் பெய்த சிறு மழையில் பல்வேறு இடங்களில் மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல் ராமையன்பட்டி ரோடு, வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதி, டவுன், பழைய பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டி பணி முடிந்த பிறகு மீண்டும் மணலை போட்டு மூடி விடுகின்றனர். இதனால் வாகனங்கள் மண்ணில் பதிந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பாதாள சாக்கடை பணி முடிந்தவுடன் அந்தப் பகுதியை மட்டும் சிமெண்ட் கலவை கொண்டு உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஒப்பந்தத்தை முறையாக பின்பற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டு பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளனர். அதேபோல் வரும் மழைக்காலத்தில் மக்கள் கஷ்டப்பட பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.

ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சாக்கடைகள் கலந்து மிகவும் மோசமாக உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் வந்து பார்த்த பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதே நிலை தான் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு கோயே 55 லட்சம் அபராதம் போட்டுள்ளனர். தாமிரபரணி நதியில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜயை பாடாய்படுத்தி விட்டனர். ஆளுங்கட்சியும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பாதுகாப்பு வழங்காமல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கலவரம் நடந்துள்ளது. அப்போது விஜய் இருந்தால் பிரச்சனை பெரிதாகும் என்று சொல்லி நாடகம் ஆடி கட்சியை முடக்கிப் போட்டுரலாம் என்பதற்காக பண்ணுகிறார்கள். ஞாயத்துக்கு புறம்பாக எது நடந்தாலும் அண்ணா திமுக தட்டிக் கேட்கும். அந்த அடிப்படையில் தான் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கேட்டார். காவல்துறையின் உத்தரவுபடி தான் அந்த இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்பது உளவு பிரிவுக்கு தெரியாமலா இருக்கும் அதற்கு ஏற்றார் போல் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆளும் அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

Exit mobile version