மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்..திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு..
வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் பேச்சுவார்த்தை…
திருவாரூர் மாவட்டம், சித்தரையூர் பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் சுந்தராம்பாள் தம்பதியின் 26 வயது மகளான சௌமியா என்பவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட மணலூர் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கர்ப்பிணியான சௌமியா பிரசவத்திற்காக.. திருவாரூர் விஜயபுரம் பகுதியில் இருக்கும் சின்ன ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து இன்று காலை சௌமியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் சௌமியாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால்..
மேல் சிகிச்சைக்காக சௌமியாவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சௌமியா இறந்து விட்டதாக கூறியதை கேட்ட அவரது உறவினர்கள்.. மருத்துவர் சரியான முறையில் சிகிச்சை செய்யாத காரணத்தினால் தான் வலிப்பு வந்ததாகவும்..ஒரு மணி நேரம் ஆம்புலன்ஸ்-ன் தாமதத்தால் தான் சௌமியா இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்..போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து.. சௌமியாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை கைது செய்ய வேண்டும்.. என்றும் சௌமியாவின் உறவினர்கள்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.. அப்பொழுது திருவாரூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் திலகம்
பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத உறவினர்கள்.. தொடர்ந்து விளமல் கல்பாலம் அருகே…
மன்னார்குடி, தஞ்சாவூர், திருவாரூர் செல்லக்கூடிய சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா மற்றும் காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதாகவும் கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
