பெங்களூரு : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் – வைரலாகும் வீடியோ, விசாரணையில் போலீஸ்

பெங்களூருவில் பைக் டாக்ஸி சேவையளிக்கும் ‘ரேபிடோ’ நிறுவன ஓட்டுநர் ஒருவர் பெண்ணை அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடையில் பணிபுரியும் அந்தப் பெண், சமீபத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி மூலம் பயணம் செய்தார். ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியதால் பாதியில் வண்டியை நிறுத்தச் சொன்னதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓட்டுநர் அந்தப் பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது. அடியில் விழும் அளவுக்கு அவரை அறைந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் செய்யுமாறு பலரும் பெண்ணுக்கு அறிவுறுத்தினாலும், அவர் வழக்குப் பதிவு செய்ய விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், non-cognizable report (NCR) பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அந்த ஓட்டுநர் சுஹாஸ் கூறியதாவது:

“நான் குறுக்கு வழிகளில் விரைவாக பயணிக்க முனைந்தேன். ஆனால், பெண் பயணி வண்டியை பாதியில் நிறுத்தச் சொன்னார். அதன்பின் ஆங்கிலத்தில் என்னை தவறாகக் கோப்பிட்டார். பின்னர் தன்னுடைய உணவுப் பையை கொண்டு என்னைத் தாக்கினார். பொதுமக்கள் பார்த்தபோது இது நடந்ததால், நானும் எதிர்வினையாற்றிவிட்டேன்,” எனத் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தனது மேற்பார்வையாளரிடம் தெரிவித்து போலீசாருக்கு ஒத்துழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஜூன் 16ஆம் தேதியிலிருந்து கர்நாடகா மாநிலத்தில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

Exit mobile version