ஜூன் மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், ஜூன் மாதம் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 9-ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளும் இதில் முடிவெடுத்தாக வேண்டும் என்பதால் அனல் தகிக்கிறது தமிழக அரசியல் களம்.
2019 – ஜூலை 25ம் தேதி, தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவை எம்.பி க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தேர்வாகினர்.
159 எம்.எல்.ஏ க்கள் இருக்கும் தி.மு.க கூட்டணிக்கு 4 எம்.பி இடங்கள் தாராளமாகக் கிடைக்கும். அதன்படி, வில்சன், அப்துல்லா இருவருமே மீண்டும் எம்.பி யாகத் தேர்வாகக் காய் நகர்த்துகிறார்கள்.
தன்னுடைய தீவிரமான ஆதரவாளர் என்பதால், அப்துல்லாவுக்கு உதயநிதி ஸ்டாலின் சப்போர்ட் செய்கிறார். அதன்படிதான், திருச்சி தொகுதி, வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ஒதுக்கப்பட்டது. வைகோவிடம் இருக்கும் மாநிலங்களவை எம்.பி சீட்டை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்குக் கொடுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
ஆனால், தங்களிடமிருக்கும் ஒரு சீட்டை விட்டுத்தர வைகோ தரப்பு தயாராக இல்லை. எனினும் வைகோ இடத்தை கமலுக்கு கொடுக்க தான் திமுக தரப்பு விரும்புவதாக தெரிகிறது.