வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்த நிலையில் பகல் பொழுது முழுவதும் மழை இல்லாமல், மந்தமான வானிலை நிலவியது. மாலைப்பொழுது முதல் லேசாக தூரல் மழையாக பெய்து வந்த நிலையில், திடீரென்று பலத்த மழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, பணிகள் முடிந்து வீடுகளுக்கு திரும்பி செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
