நடிகர் ஆர்யா நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த தொழில்களை தனது தம்பியும், நடிகருமான சத்யா மூலமாக மேற்கொண்டு வருகின்றர்..
ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் Sea Shell என்ற பெயரில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள சீ ஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 5 ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடந்து வருகின்றது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருகிறது.
தற்போது சீ ஷெல் ஹோட்டல் தன்னுடையது அல்ல எனவும், சில ஆண்டுகளுக்கு முன்பாகவே குன்ஹி மூசா என்பவர் வாங்கிவிட்டதாகவும் ஆர்யா விளக்கமளித்துள்ளார். இதனால், தரமணியில் உள்ள குன்ஹி மூசாவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகின்றது.