பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. பசியால் நாட்டு மக்கள் வாழக்கூடாது என்ற நோக்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதனை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன் மாவட்டச் செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம் நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், வர்த்தக அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி, மாநகரச் செயலாளர் ஆனந்த், வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் பி.டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக வெற்றிவேல் மார்க்சிஸ்ட் செல்ல சுவாமி, காங்கிரஸ் உதயம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

















