January 31, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Satheesa
January 28, 2026
in News
A A
0
DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
– சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என எச்சரிக்கை:-

டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சீர் மரபினர் 68 சமுதாயங்களுக்கும் “டி.என்.டி” என்ற ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டி.என்.டி சமுதாய மக்கள், சீர்மரபினர் சமுதாயங்களுக்கு ஒரே ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், டி.என்.டி மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தபோது, மீண்டும் ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது வரை அது நடைமுறைக்கு வராததால் டி.என்.டி சமுதாய மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

டி.என்.டி (Denotified Tribes) எனப்படும் சீர் மரபினர் சமுதாயங்கள், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ‘குற்றவாளி சமூகங்கள்’ என அறிவிக்கப்பட்டு, பின்னர் சுதந்திர இந்தியாவில் அந்தச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சமூகங்களாகும். இருப்பினும், இன்றளவும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலேயே இச்சமுதாயங்கள் வாழ்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள சீர் மரபினர் சமுதாயங்கள், பாரம்பரிய கலைகள், நாட்டுப்புற இசை, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், மர வேலைப்பாடுகள், தோல் தொழில், பாம்பு பிடித்தல், விலங்கு பராமரிப்பு, கூலி வேலை, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தனித்தனி சாதிச் சான்றிதழ்கள் காரணமாக, கல்வி, நிலையான வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இச்சமுதாயங்களில் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத்தால், தலைமுறை தோறும் கல்வித் தட்டுப்பாடு நிலவி வந்ததாகவும், அதன் விளைவாக அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் நலத்திட்டங்களை அணுகுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டால், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் அரசு நலத்திட்டங்களில் சமுதாயம் முன்னேற வாய்ப்பு ஏற்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், தனித்தனி சாதிச் சான்றிதழ்கள் காரணமாக சமூகத்தின் உள் அமைப்பில் குழப்பம் மற்றும் பிரிவினை நிலவி வருவதாகவும், ஒற்றை டி.என்.டி சான்றிதழ் வழங்கப்பட்டால், சீர் மரபினர் சமுதாயங்கள் ஒருங்கிணைந்த சமூக அடையாளத்துடன் செயல்பட முடியும் என்றும், அது சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

டி.என்.டி ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்குவதாக கூறி தங்களை ஏமாற்றி, சமுதாய மக்களின் வாக்குகளை பெற்ற திமுகவிற்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என, கோயில்களில் சமுதாய மக்களிடம் சத்தியம் வாங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஒற்றைச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, திமுக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்களும், சட்டமன்றத் தேர்தலில் எதிர்ப்பு பிரச்சாரமும் தொடரும் என டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, “டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். எங்கள் சமுதாய மக்களை ஏமாற்றிய திமுகவிற்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் டி.என்.டி சமுதாயம் தக்க பாடம் புகட்டும்” என தெரிவித்தார்.

Tags: district newsdmk governmentDNT communitytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற முத்தாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Next Post

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிராமநிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்&தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்புபோராட்டம்

Related Posts

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி
News

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
News

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை
News

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி
News

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026
Next Post
தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிராமநிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்&தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்புபோராட்டம்

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிராமநிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்&தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்புபோராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

January 31, 2026
தேசத்தின் தூண்களுக்குத் தேசப்பற்று வணக்கம்… தூய்மைப் பணியாளர்களைச் சீருடையால் சிறப்பித்த தம்பிபட்டி குடியரசு தின விழா!

போதைக்குக் கொடுப்போம் ஒருநாள் விடுமுறை… மதுவை வெல்ல மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் காட்டிய எளிய மந்திரம்!

January 31, 2026
நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

0
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

0
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

0
நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026

Recent News

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

January 31, 2026
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

மயிலாடுதுறை16வயது சிறுமிக்கு பாலியல்துன்புறுத்தல் அளித்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொறுப்பாளர் போக்ஸோசட்டத்தில் சிறை

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.