சொத்து குவிப்பு , கனிமவள கொள்ளை , என ஒரு வழக்கு கூட இல்லை அதனால் தேமுதிக மீது பேரம் என ஒற்றை சொல்லை வைத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள் , எந்த பேரத்திற்கும் , எதற்கும் தேமுதிக அடிபணியாது மற்ற கட்சிகள் செய்தால் கூட்டணி பேச்சுவார்தை நாங்கள் செய்தால் பேரம் ஆ ,?? தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்க உள்ளது அது மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் என கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.
தமிழகம் முழுவதும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பூத் முகவர்கள் நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்
ராஜாக்கமங்கலம் பகுதியில் இன்றுடன் பரப்புரை நிறைவடைந்தது , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில்
பிரேமலதா விஜயகாந்த் பேசினார் அப்போது அவர் கூறுகையில் ,
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் எது உண்மை என மக்களுக்கு தெரியும் , சொத்து குவிப்பு , கனிமவள கொள்ளை , என ஒரு வழக்கு கூட இல்லை அதனால் தேமுதிக மீது பேரம் என ஒற்றை சொல்லை வைத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள் , எந்த பேரத்திற்கும் , எதற்கும் தேமுதிக அடிபணியாது மற்ற கட்சிகள் செய்தால் கூட்டணி பேச்சுவார்தை நாங்கள் செய்தால் பேரம் ஆ ,
மகத்தான கூட்டணியை அமைப்போம் , தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்க உள்ளது அது மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்
ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளை தவிர்த்து 234 தொகுதியிலும் பூத் முகவர்கள் அமைத்து உள்ள ஒரு கட்சி தேமுதிக தான் , இது பெரும் வெற்றி.
அன்று முதல் இன்று வரை
தேமுதிகவிற்க நிகர் தேமுதிக மட்டும்தான் , கேப்டன் இல்லை அதனால் கட்சி இல்லை கடலூர் மாநாட்டிற்கு கூட்டம் வராது என கூறியதை முறியடித்து மாநாடு வெற்றி பெற்றது.
கேப்டன் இருந்த போது அவரது பெயரை , அவரது புகழை மறைக்க பல சதிகள் செய்தார்கள் என கூறினார்.
