July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி: மேட்டுப்பாளையம் ஏலம் பாதியில் நிறுத்தம்!

by sowmiarajan
December 10, 2025
in News
A A
0
உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி: மேட்டுப்பாளையம் ஏலம் பாதியில் நிறுத்தம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு வரத்து அதகரித்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் கிராக்கி குறைந்ததால் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு ஏலம் போனது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் – நெல்லித்துறை சாலையில் கடந்த 1935 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (Nilgiris Cooperative Marketing Society) 618 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் ஊழியர்களால் தரம் பிரிக்கப்பட்டு, 45 கிலோ கொண்ட மூட்டைகளாகக் கட்டி, அதன் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் ஏல முறையில் வாங்கிச் செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இச்சங்கத்திற்குக் கொண்டு வரப்பட்ட 22 லோடுகள் (சுமார் 198 டன்) உருளைக்கிழங்கு, 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ. 1880 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 1000 வரையிலும் விற்பனையானது. ஆனால், நேற்று (டிசம்பர் 9, 2025) நடைபெற்ற ஏலத்தின்போது, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மொத்தமாக 34 லோடுகள் (சுமார் 306 டன்) உருளைக்கிழங்குகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். அப்போது நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 1440க்கும், குறைந்தபட்சமாக ரூ. 1060க்கும் மட்டுமே விலை கிடைத்தது. முந்தைய நாளை விட அதிகபட்ச விலை ரூ. 440 குறைந்ததால், தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சங்க அதிகாரிகளுடன் உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price) வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்ததால், ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கூட்டுறவு சங்கச் சார்பதிவாளரும், மேலாளருமான நிசார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நீலகிரி மாவட்டத்தில் தற்போது அதிக விளைச்சல் காரணமாக மேட்டுப்பாளையம் சங்கத்திற்கு உருளைக்கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மூலமாக வெளி உருளைக்கிழங்கு மண்டிகளுக்கும் சுமார் 70 லோடுகள் (சுமார் 630 டன்) உருளைக்கிழங்கு வரத்து உள்ளது. இங்கிருந்து உருளைக்கிழங்குகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அவற்றை அண்டை மாவட்டமான கேரளாவிற்கும், மேலும் இலங்கை, மாலத்தீவு, துபாய், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது இலங்கையில் வெள்ளப் பாதிப்பு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊட்டி உருளைக்கிழங்கிற்கு வெளிச்சந்தையில் கிராக்கி குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக, ஏலத்தில் கலந்துகொள்ள வியாபாரிகள் அதிகமாக ஆர்வம் காட்டாததால், உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றும் அவர் விளக்கினார். இதையடுத்து, ஒரு நாள் தாமதமாக இன்று (டிசம்பர் 10) ஏலத்தை நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags: agriculture marketcrop sale disruptionfarmers concernmarket updateMettupalayam marketpotato price drop
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நிலச்சரிவு அபாயப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

Next Post

எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

Related Posts

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை
News

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்
News

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
News

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
News

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026
Next Post
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் - காங்கிரஸ் வெளிநடப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டு திருவிழா

July 23, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றியடைய வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் 101 லிட்டர் பால் அபிஷேகம்

July 22, 2026
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

July 12, 2026
மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

July 6, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

0
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

0
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026

Recent News

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.