தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன், குரு மகா சன்னிதானத்திடம் ஆசிர்வாதம் பெற்று மனமுருகப் பாடிய பக்தி பாடல், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி இன்று நள்ளிரவில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை கச்சேரி,ஆதீனத்தில் நடைபெற்றது. கச்சேரியில் பங்கேற்பதற்காக வந்த பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து ஆதீனத்தின் முன்பு அபய கரம் கிடைக்குமா, என்ற பக்தி பாடலை நெஞ்சம் உருக பாடினார். தொடர்ந்து வேல்முருகனின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.














