சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை எதற்காக கடல் மணல் கடத்தல் நடைபெற்றது. தீவிர விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவர் கிராமத்தில் இருந்து கடல் மணலை ஏற்றி சென்ற இரண்டு லாரிகளை பொறையார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் தரங்கம்பாடி தாலுகாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது அனுமதி பெற்றும் பெறாமலும் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்றது தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் மணல் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவில் கடலோர பகுதிகளில் கடல் மணலை இரவு நேரங்களில் லாரிகளில் கடத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.சந்திர பாடி மீனவ கிராமத்திலிருந்து கடல் மணலை ஏற்றி சென்ற லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் தொடர்ந்து இதுபோன்று கடல் மணல் கடத்தப்பட்டு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு கொண்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கடல் மணல் என்பது சர்வதேச சொத்து மத்திய அரசுக்கு உட்பட்டது என்ற நிலையிலும் கடல் மணலில் பல்வேறு தாதுக்கள் இருப்பதால் எதற்காக கடல் மணல் கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் இந்த கடல் மணல் கடத்தலுக்கு சில வருவாய்த்துறை மற்றும் சில காவல்துறையினர் உடந்தையாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version