லண்டன் : ஆமதாபாத்திலிருந்து பிரிட்டன் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி, கடும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பிரிட்டனைச் சேர்ந்த பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டிருந்த விமானம் ஆமதாபாத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை கண்காணித்து வருகிறோம். இந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக என் மனமார்ந்த எண்ணங்கள் செலுத்தப்படுகின்றன” என தெரிவித்தார்.
இந்நிலையில், டில்லியில் உள்ள இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஒரு இரங்கல் அறிக்கையை வெளியிட்டு,
“விமான விபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கும், சம்பவத்தின் விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். தூதரக உதவி தேவைப்படும்வர்கள் அல்லது அவர்களது நெருங்கியவர்களைப் பற்றி தகவல் தேவைப்படும் நிலையிலுள்ளவர்கள், 020 7008 5000 என்ற எண்னை தொடர்புகொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை அதிகாரப்பூர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். விமானத்தில் இருந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் துயரமான விவரங்கள் இன்னும் உறுதியாகவில்லை.