சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவுTRO பூங்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது. புதிய தவெக அரசு அமைந்த உடன் பலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என வருத்தம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் 21-ம் தேதி முதல் ஜமாபந்தி எனும் வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை செய்யும் பணியானது நடைபெறுகிறது 4-வது நாளாக . டிஆர்ஓ பூங்கொடி தலைமையில் வைத்தீஸ்வரன் கோயில் சரகத்திற்கு உட்பட்ட 27 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கான குறைகளை டிஆர்ஓ பூங்கொடியிடம் மனுவாக அளித்தனர். இவற்றில் கடந்த பிப்ரவரி மாதம் வரை மகளிர் உரிமை தொகை பெற்றவர்களில் பலருக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என மனு அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்த டிஆர்ஓ பூங்கொடி மற்றும் வட்டாட்சியர் ராஜரத்தினம் ஆகியோர் மனுக்கள் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மொத்தமாக 248 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு துறைவாரியாக பிரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version