திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் விடுத்து போலியாக ஆவணம் தயார் செய்து சொத்தை அபகரித்து கொண்ட தங்கை மற்றும் தங்கை மகன், பணியாட்கள் ,பத்திர பதிவு செய்த அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த நபரால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அப்துல்ரஹீம் தெரு சிகேசி ரோடு பகுதியை சேர்ந்த முகமதுகலீல் ஆஸ்மதுன்னிஸா தம்பதியினர் இவர்களுக்கு அஜிஜீர்ரகுமான் என்ற மகனும், ஜக்கியபானு என்ற மகளும் உள்ள நிலையில் முகமது கலீலும் அவரது மனைவி அஸ்மதுன்னிஷா இறந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை மகன் அஜிஜீர்ரகுமான் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜிஜீர்ரகுமானின் தங்கை ஜக்கியபானு, ஜக்கியபானுவின் மகன் முகமத்ரூபிநஜீப் மற்றும் அஜிஜீர்ரகுமானிடம் வேலை செய்யும் பணியாளர் ஜமுனாமத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பிரபு மற்றும் அஜிஜீர்ரகுமானின் அம்மாவிடம் வேலை செய்த பணியாளர் கரக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மாபுசாய்வு என்பவரின் மகன் காசிம் ஆகியோர் கூட்டு சேர்ந்து கொண்டு அஜிஜீர்ரகுமான் மற்றும் அவருடைய மனைவி 3 பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைத்து கட்டாயப்படுத்தியும் பயமுறுத்தியும் கொலை மிரட்டல் விடுத்தும் அஜிஜீர்ரகுமான் தந்தை கலீல்ரகுமான் மற்றும் தாய் அஸ்மதுன்னிஷா ஆகியோருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களான திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட CKC ரோடு பகுதியில் அஜிஜீர்ரகுமான் குடும்பத்தினர் வசித்து வரும் இரண்டு அடுக்கு மாடி, தரைத்தளத்தில் உள்ள ஆறு கடைகள் மற்றும் அதே பகுதியில் உள்ள மூன்றடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 19 வீடுகள் அதன் தரைதளத்தில் உள்ள இரண்டு கடைகள் மற்றும் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 27 கடைகள் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ள சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட தென்னை மற்றும் மாமரங்கள் கொண்ட சொத்துக்கள் சுமார் 500 சவரன் தங்கநகைகள் மற்றும் 50 கிலோ வெள்ளி சாமான்கள் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பணம் மற்றும் திருப்பத்தூர் கிருஷ்ணகிரிரோடு பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் அஜ்ஜீர்ரகுமான் மற்றும் அவருடைய தந்தை கலீல்ரஹ்மான் பெயரில் இருந்த பணம் ஆகிய அசையும் மற்றும் ஆசையா சொத்துக்கள் என அனைத்தையும் போலியான ஆவணங்களை தயார் செய்து சார்பதிவாளர்கள் உதவியுடன் மோசடி செய்து சொத்துக்களை பதிவு செய்து அனைத்து சொத்துக்களையும் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அஜ்ஜீர்ரகுமான் இன்று தன் குடும்பத்துடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு தரக்கோரியும் தன்னையும் தன் குடும்பத்தையும் அடைத்து வைத்து கொலைமிட்டல் செய்த தன்னுடைய தங்கை மற்றும் தங்கை மகன் அதற்கு உடந்தையாக இருந்த பணியாளர்கள் மற்றும் போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் தன்னுடன் பிறந்த தங்கையே மகன் மற்றும் பணியாட்களை கொண்டு அண்ணன் மற்றும் அண்ணன் குடும்பத்தாரை அடைத்து வைத்து கொலைமிரட்டல் விடுத்து சொத்தை அபகரித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
