மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமமான நாதல் படுகையில் மற்றும் முதலைமேடு.,சந்தப்படுகை, ,திட்டு படுகை , சரஸ்வதி விளக்கம், பாலுறான் படுகைஆகிய கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டு ஏற்படும்வெள்ளப்பெருக்கினால்கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டு படுகைகிராமங்கள்பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விவசாய சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது..
2022 ஆம் ஆண்டு,2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் நாதல்படுகை திட்டு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம், அய்யாதுரை,மாரிமுத்து,கணேச மூர்த்தி,சுந்தரமூர்த்தி,ராமு ஆகியோர்களின் வீடுகள்ll கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டு விட்டன.எனவே வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு இலவச மனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டி தர வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் நாதல்படுகை,, முதலை மேடு, திட்டு படுகை ஆகிய ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கர் விளை நிலங்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. எனவே அதற்கு பதிலாக விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் திட்டு கிராமங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு வருவதால் இன்னும் சில வருடங்களில் திட்டு கிராமங்கள் முழுவதும் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சூழ்நிலை இருந்து வருவதால் தற்போதுள்ள குடியிருப்புவாசிகளையும், விளை நிலங்களையும் காப்பாற்றும் வகையிலும், மண்ணரிப்பை தடுக்கும் வகையிலும் பாறாங்கற்களை கொண்டு ஒரு மாத காலத்திற்குள்
தடுப்புச் சுவர் அமைத்து திட்டு கிராமங்களை காப்பாற்ற வேண்டும். திட்டு கிராம பகுதியை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்..
