திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை திமுக பரப்பி வருவதாகவும்,இதற்கெல்லாம் 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கீழடி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டேன்.முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிய ராஜன் அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார்.என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக கூறி விட்டோம்.
முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக கேட்ட போது, அவரவர் விரும்பும் கடவுள்களை வணங்குவது ஜனநாயகத்தில் அவரவர் விருப்பம்.
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என அமித் ஷா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதே சமயம் அவர் தாய் மொழி முக்கியம் என கூறி இருக்கிறார்.அனைவருக்கும் தாய் மொழி என்பது மிக மிக முக்கியம். தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற பொருள்பட தான் அவர் கூறி இருக்கிறார்
கேலி சித்திரங்களுக்கு – 2026ல் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள்.திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது .அதனை பிரதமர் முன்னெடுத்து வருவது அதற்கு வாழ்த்துகள் என பதில் அளித்து சென்றார்.