பெங்களூருவில் மக்கள் அவதி !

கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. தலைநகர் பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மழையால் பெருக்கெடுத்த வெள்ளநீரும், சாக்கடை கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத, பைக், கார்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

பொதுமக்கள் நலன் கருதி, மாநில அரசு சார்பில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு படகுகள் இயக்கப்படுகின்றன. மாநில அரசை விமர்சனம் செய்யும் வகையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Exit mobile version