“வண்டிய எப்போ சார் கொடுப்பீங்க” – வாடிக்கையாளர்கள் வேதனை

ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்திய ரோட்ஸ்டர் மின்சார இருசக்கர வாகனங்கள் டெலிவரியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கே இன்னும் வாகனங்கள் வழங்கப்படவில்லை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓலா நிறுவனம், தனது மின்சார வாகனத் தயாரிப்பை விரைவாக வளர்த்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ரோட்ஸ்டர் மாடல்கள் – ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ – வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை 1,395 பேர் இந்த வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர்.

முதலில் மே மாதத்திலிருந்து டெலிவரி செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலவரப்படி ஒரு வாகனமும் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. தாமதத்துக்கான காரணம் குறித்து ஓலா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் வட்டாரத் தகவல்களின் பேரில், ‘ஹோமோலோகேஷன்’ எனப்படும் சான்றிதழ் பெறும் செயல்முறை காரணமாக தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சான்றிதழ், வாகனங்கள் பாதுகாப்பானவையா, சாலையில் ஓட்ட ஏற்றதா என்பதை பரிசோதித்து வழங்கப்படும்.

வாகன விவரங்கள்:

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், டெலிவரி தாமதம் பெரும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஓலா நிறுவனம் விரைவில் சிக்கலைத் தீர்த்து வாகனங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version