கோடியக்கரையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் ஒன்பது பேர் கைது :-
மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை சேர்ந்த மஞ்சுளா மற்றும் சின்னங்குடியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் அந்த பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மதியம் இரண்டு படகுகளில் 9 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒன்பது மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது பைபர் படகுகளையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
