தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வியை மாற்றும் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

நொய்டா : “தேசிய கல்விக் கொள்கை (NEP) செயல்படுத்தப்படும்போது, இந்தியாவின் கல்வி களத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சித்தாந்தவாதி மற்றும் ஜனசங்கத்தின் நிறுவுநரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளான ‘பாலிதான் திவாஸ்’ விழாவில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய துணை ஜனாதிபதி, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அமிட்டி பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) ஏற்பாடு செய்த துணைவேந்தர்களின் 99வது ஆண்டு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் அவர் கலந்து கொண்டார்.

அதில் பேசும்போது, “இந்தக் கொள்கையை உருவாக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் உருவான தேசிய கல்விக் கொள்கை 2020, நம் கல்வி முறையை உண்மையில் மாற்றக்கூடியதாக உள்ளது,” என்றார்.

மேலும், “இந்தக் கொள்கை நம் நாகரிகம், உணர்வு மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. இதன் முழுமையான செயல்பாடுகள், இந்தியாவின் கல்வித் துறையில் விரிவான மாற்றங்களை ஏற்படுத்தும்,” என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version