மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு மாமியார், அவரது கள்ள காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. இதையடுத்து கணவரை பிரிந்து தனது 3 மகன்களுடன், தங்கப்பாண்டியனின் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ற இளஞ்சியம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார். களஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினம் மாவட்டம் கூரத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சினேகா (23) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 13ம் தேதி முடிந்த நிலையில் இளஞ்சியம், தங்கபாண்டியன் மற்றும் மருமகள் சினேகா, அவரது குழந்தை ஆகிய 4 பேரும் கடந்த 18ம் தேதி சொந்த ஊரான எடமேலையூர் கிராமத்திற்கு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி இரவு திருப்பூர் செல்ல வேண்டும் என சினேகா கூறியதால், அவரை அனுப்பி வைப்பதற்காக மன்னார்குடி பேருந்து நிலையத்திற்கு தங்கபாண்டியன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். 21ம்தேதி சினேகாவிற்கு, அவரது தாய் தமிழ்ச்செல்வி செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு அவர் எடுக்கவில்லை. சந்தேகத்தில் விசாரிக்கையில் எடமேலையூர் கிராமத்திற்கு சினேகா வந்து சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி கடந்த 21ம் தேதி மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் மாயமான சினேகாவை தேடி வந்தனர் இதில் எடமேலையூர் செல்லும் சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த தங்கபாண்டியன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது திருப்பூரில் கணவர் இறந்த பின்பு சினேகாவின் பல நண்பர்களுடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாகவும் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது மாமியாரிடம் சினேகா தனி குடித்தனம் செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளார் , சொத்தில் சினேகா பாகம் கேட்பார் என்பதற்காக மன்னார்குடியில் வைத்து சினேகாவை தீர்த்துக் கட்டுவதற்கு முடிவு செய்து கோயிலுக்கு செல்வது போல் எடமேலையூர் அழைத்து வந்து அங்கு இளஞ்சியம் மற்றும் கள்ளக்காதலன் தங்கபாண்டியன் ஆகியோர் சேர்ந்து சினேகாவை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சோனாப்பேட்டை கால்வாயில் வீசி சென்றதும் தெரியவந்தது போலீசார் அந்த பகுதியில் உடலை தேடி பார்த்தபோது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் சினேகாவின் உடல் கோரையில் சிக்கியும் சேற்றில் சிக்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சினேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இளஞ்சியம், கள்ள காதலன் தங்கபாண்டியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
