போபால் : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுப்பிய ஒரு தொலைபேசி அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் சங்கடன் ஸ்ரீஜன் அபியான் தொடக்க விழாவில் உரையாற்றிய ராகுல், “இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது அமெரிக்கா போரத்தை நிறுத்தியதாக கூறுகிறது. உண்மையில், டிரம்ப் ஒரு தொலைபேசி அழைப்பில் ‛மோடி ஜி, என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டதும், ‛நரேந்திரா, சரணடையுங்கள்’ என்று கூறியதும், உடனே மோடி ‘யஸ் சார்’ என ஒப்புக்கொண்டுவிட்டார்,” என்றார்.
மேலும், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது சிறிதளவு அழுத்தம் கொடுத்தாலே பயந்து விடுகிறார்கள். டிரம்பின் ஒரு சின்ன அழைப்புக்கே மோடி சிக்னல் பெற்றுக்கொண்டு சரணடைவது தான் இன்றைய தலைமையின் நிலை,” என்று ராகுல் விமர்சித்தார்.
இதனையடுத்து 1971ல் பாகிஸ்தானை தோற்கடித்து வங்கதேசத்தை உருவாக்கிய நிலையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த முடிவுகளை குறிப்பிட்டார். “அப்போது அமெரிக்க போர் கப்பல்களும் வந்தன. ஆனாலும் இந்திரா காந்தி பயப்படவில்லை. அவ்வாறான தீரக்கூடிய தலைமையே நாட்டுக்கு தேவை,” என்று அவர் கூறினார்.
“சுதந்திர இந்தியாவிற்கு பிறகு காங்கிரஸ் தலைவர்கள் சரணடையவில்லை; அவர்கள் சூப்பர் பவர்களுக்கு எதிராகப் போராடினர். ஆனால் இன்றைய பாஜக தலைமையிடம் அந்த ஆண்மை இல்லை,” என ராகுல் கண்டனம் தெரிவித்தார்.