மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

சென்னை :
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மகளிர் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அரசுத் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் அதி நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ சேவை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ ஊர்தி, தூர்ந்த பகுதிகளிலும் மகளிருக்கு மருத்துவ சேவைகளை எளிதில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், மொத்தம் ரூ.62 கோடி 51 லட்சம் மதிப்பில் புதிய ‘தோழி விடுதிகள்’ அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை ராயபுரத்தில் புதிய அரசினர் குழந்தைகள் இல்லம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக மாணவர் ஒருவர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தபோது, அருகில் இருந்த அமைச்சர் கீதா ஜீவன் உணர்ச்சிவசப்படினார்.

அதோடு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வான 19 திறன்மிகு உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு அமைச்சர்கள், உயரதிகாரிகள், மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version