டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அதில் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். முதல்வரின் டெல்லி பயணம் குறித்து எ.பழனிசாமி மற்றும் விஜய் ஆகியோர் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.
குறிப்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும் ? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்’ என விமர்சித்திருந்தார்.
இதற்கு, துரைமுருகன் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ”பச்சா பொலிடிகல்” ஒரு குழந்தைத்தனமான அரசியல் என்று பதிலளித்தார்