கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கும் பகுதியில் ஸ்ரீ சபரிகிரிசன் ஆலயம் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டு விழா மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 43ம் ஆண்டு மண்டல பூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது . இவ்விழாவின் முதல் நிகழ்வாக ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ வண்ணான் குளக்கருப்பசாமி, ஸ்ரீ சபரிகிரிசன் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் , நெய் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 51 வகையான வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் குருசாமிகள் பாலு, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஐய்யப்ப பக்தர்கள் ஒன்றுக்கூடி பஜனை பாடல்கள் பாடி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 18 படிகளில் தீபம் ஏற்றி சரணகோஷமிட்டு வழிபாடு செய்தனர் .
இதில் அரிகரசுதனாக சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க சபரி கிரிசன் அய்யப்பனை கீழ்பெரும்பாக்கம், இந்திரா நகர் , கட்டபொம்மன் நகர, ராஜகோபால் நக,ர், மகாராஜபுரம், காகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்களும், பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மகா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஸ்ரீ சபரிகிரிசன் ஆலய பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. .

Exit mobile version