மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் மற்றும் சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்:- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு:-

மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி மேலப் பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் மற்றும் சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நேற்று முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து, விமான கும்பத்தை அடைந்து, கோயில் விமான கலசத்தில் புனிதநீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.இதனைத் தொடர்ந்து
மேளத்தின் தாளத்துக்கு ஏற்றவாறு சாமி வந்து ஏராளமான பெண்கள் நடனம் ஆடினார்

Exit mobile version