செம்பனார்கோயில் அங்காளம்மன் ஆலய மகா கம்பாபிஷேகம்

செம்பனார்கோயில் அருகே அங்காளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் பழமையான அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version