மதுரை – மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் | நள்ளிரவு பரபரப்பு நேற்று நள்ளிரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், திருச்சி மற்றும் சென்னை நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படாததும், பேருந்து எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாலும், பயணிகள் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தினர். நள்ளிரவு நேரம் என்பதால், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், சிறுவர்-சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் பேருந்து வசதி இல்லை என்றால், மக்கள் எங்கே போவது?” “சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான பேருந்துகளை இயக்க முடியாத அரசா இது? வயதானவர்கள், குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலை இல்லையா?” “பேருந்து நிலையத்தில் எந்த அதிகாரியும் சரியான தகவல் சொல்லவில்லை. கேள்வி கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இது அரசு சேவையா?”
என்று கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்
மதுரை – மாட்டுத்தாவணிபேருந்துநிலையம் | நள்ளிரவுபரபரப்பு
