சென்னை : தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான புதிய தேர்தல் 2025 ஜூன் 19 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
2019 ஜூலை 5 ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்வாகிய பி. வில்சன் (திமுக), சண்முகம் (திமுக), எம்.எம். அப்துல்லா (திமுக), வைகோ (ம.தி.மு.க), சந்திரசேகர் (அ.தி.மு.க), மற்றும் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) ஆகியோரின் பதவிக்காலம் இவ்வருட ஜூலை மாதத்தில் முடிவடைகிறது.
இந்த நிலையில், வரும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக மூன்று வேட்பாளர்கள் மற்றும் மநீம (மக்கள் நீதி மய்யம்) சார்பாக ஒரு வேட்பாளர் களமிறக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்கள் :
- பி. வில்சன், பி.எஸ்.சி., பி.எல்.
- எஸ்.ஆர். சிவலிங்கம்
- ரொக்கையா மாலிக் (கவிஞர் சல்மா)
இவ்வேளையில், மக்களவைத் தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் மநீம இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், மநீம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், கமல்ஹாசனின் பாராளுமன்ற பயணம் தொடங்குகிறது என்பது உறுதியானதாகியுள்ளது.