September 17, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மூலிகை சேகரிப்பில் கடமலை மயிலை மலைவாழ் மக்கள் தீவிரம்

by sowmiarajan
December 8, 2025
in News
A A
0
மூலிகை சேகரிப்பில் கடமலை மயிலை மலைவாழ் மக்கள் தீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி: தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, தும்மக்குண்டு, உப்புத்துறை, ஆட்டுப்பாறை, நொச்சி ஓடை, கரட்டுப்பட்டி, துரைச்சாமிபுரம், அய்யனார்கோவில், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், தற்போது வனப்பகுதியில் சர்க்கரை கொல்லி, ஆவாரம் பூ உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளைப் பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வனத்துறை மற்றும் காவல்துறை அச்சுறுத்தலால் தங்களுக்குப் பாதுகாப்பு தேவை என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில், மலைவாழ் மக்கள் சர்க்கரை கொல்லி மற்றும் ஆவாரம் பூ போன்ற மூலிகைகளைப் பறிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வனப்பகுதிக்குச் செல்லும் இவர்கள், மாலை 6 மணி வரை மலைப்பகுதியில் மூலிகைகளைப் பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தெரிவித்தனர். தற்போது, சர்க்கரை கொல்லி மூலிகை ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விலைபோய்க் கொண்டிருக்கிறது. மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் நேரடியாக வந்து இந்த மூலிகைகளைக் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

மூலிகை சேகரிப்பில் ஈடுபட்டாலும், கிடைக்கும் வருமானம் அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்குக் கூடப் போதியதாக இல்லை என்று மலைவாழ் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், வனப்பகுதிகளுக்குச் சென்று மூலிகைகள் பறிக்கும்போது, வனத்துறையினரின் அச்சுறுத்தலும், கெடுபிடியும் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர்கள் புலம்பினர். இதுகுறித்து மலைவாழ் மக்களின் தலைவர் வேலுச்சாமி அவர்கள் பேசுகையில், “மலைகளில் வாழும் எங்களுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நாங்கள் தேனெடுத்தல், கிழங்கு பறித்தல், மூலிகை பறித்தல் உள்ளிட்ட பணிகளைத் தலைமுறை தலைமுறையாகவும், கடந்த நான்கு தலைமுறையாகவும் செய்து வருகிறோம். இந்தக் காலங்காலமான பணிகளுக்கு இனிவரும் காலங்களில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்குத் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியும், அவர்களின் பாரம்பரியத் தொழில்களுக்கு உதவும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: forest communitiesherbal collectionhill tribeindigenous livelihoodKadamalai Mayilai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிக மகசூலுக்கு ஆண்டுக்கொரு முறை மண்ணை ஆய்வு

Next Post

ஊட்டி தேயிலைப் பூங்காவில் 2000 தேயிலை நாற்றுகள் உற்பத்தி

Related Posts

MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
News

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
News

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
News

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
News

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

September 16, 2026
Next Post
ஊட்டி தேயிலைப் பூங்காவில் 2000 தேயிலை நாற்றுகள் உற்பத்தி

ஊட்டி தேயிலைப் பூங்காவில் 2000 தேயிலை நாற்றுகள் உற்பத்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில்

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில்

October 12, 2025
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

0
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

September 16, 2026

Recent News

MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பால் வினியோகம் நெருக்கடிகளை சந்திக்காமல் இருந்தநிலையில் தற்போதைய ஆட்சி தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

ஆவடி பகுதிக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடை வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர்,தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால்,சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்ககோரிக்கை

September 16, 2026
MGRபல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் வேட்போனு தாக்கல்

September 16, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.