கோடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ்டர்.ஜெயலலிதா ஜெயராமன் என சொல்லி இருப்பீர்களா இப்போது சொல்ல முடியுமா என உலகங்கத்தான் பகுதியில் நடைபெற்ற சரத்குமாரின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் கேள்வி..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமாரின் 71-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அரசு பள்ளியில் பொதுத் தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் கையடக்க கணினி மற்றும் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணாடி மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் விவசாயிகளுக்கு விவசாயி இடுபொருட்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு நிகரான மக்கள் செல்வாக்கு உடையவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்றும், அவர் கட்சி தொடங்கியது முதல் பல்வேறு விதமான போராட்டங்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்றும் கூறினார்… தொடர்ந்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் பேசுகையில்;
“மிஸ்டர்.பிரைம் மினிஸ்டர்” என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை, நீங்கள் கோடநாட்டில் தெருவிலே நின்று கொண்டிருந்தபோது “மிஸ் ஜெயலலிதா ஜெயராம்” என்று சொல்லி இருப்பீர்களா ? என்ன தவறு என்று கேட்டீர்கள் இன்னைக்கு சொல்லி பாருங்க புரட்சித்தலைவி அம்மாவை பார்த்து அவர்களைப் பற்றி நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும் என்று சொன்னால் மிஸ்.ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லிப் பாருங்கள். சிங்கம் வேட்டைக்கு மட்டும் போகுமா அப்புறம் வந்து தூங்கிடுமா.. சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே வருமா. மத்த நேரத்துல சாப்பிட்டு தூங்கிடுமா. அந்த மாதிரி சிங்கமா இருக்கக்கூடாது. சிங்கம் என்றால் சிங்கமாக இருக்க வேண்டும். தூங்குகின்ற சிங்கமாக இருக்கக் கூடாது. இது எதற்காக சொல்கின்றேன் என்றால் தன்மையற்று பேசியதால் அவரைப் பற்றி நான் பேசுகின்றேன். இல்லையென்றால் அதைப் பற்றி நான் பேசமாட்டேன். அடுத்து நமது முதலமைச்சர் அவர்களையும் அங்கிள் என்று கூப்பிடுகின்றார்.
நீ என்னை கூப்பிடு அங்கிள் என கூப்பிடு, தாத்தா என கூப்பிடு, என்ன வேணா கூப்பிடு கவலை இல்லை…. ஆனால் தரம் என்று ஒன்று இருக்கிறது…. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீங்கள் அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கின்றீர்களோ இல்லையோ அந்தப் பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். இது போன்ற தரத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் விஜய் அவர்களே. எதற்கெடுத்தாலும் பாசிச அரசு பாசிச அரசு சொல்கின்றார் ஹிட்லர் போன்றவர்கள் கடைபிடித்தது பாசிச அரசு. அதெல்லாம் படிச்சிருப்பார்னு நினைக்கிறேன் தெரியல. துன்புறுத்துபவர்கள், இனப்படுகொலை செய்பவர்கள் அவர்கள் தான் பாசிசம் ஆனால் அப்படிப்பட்ட ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது உண்மையை பேசுங்கள் என்றும், இஸ்லாமியருக்கு எதிரியாக இருப்பவர் மோடி என பேசுகின்றார். அப்புறம் எப்படி காஷ்மீரில் 25 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்றும், பாஜக ராமர் கோயில் கட்டுகிறேன் தவிர எங்காவது ஒரு இடத்தில் ஆவது பாஜக ஆட்சியில் மசூதி இடிக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்…
