திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், “பராசக்தி பார்க்க நேரம் இருக்கிறது, எங்கள் செய்தி பார்க்க நேரமில்லையா.?உரிமை தொகை கொடுக்க நிதி உள்ளது. சம்பளம் கொடுக்க நிதி இல்லையா.? என்று கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது..

திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கல்லூரி வாயில் முன்பு உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இவர்களின் பிரதான நோக்கமாக நீதிமன்றம் உறுதி செய்த யுஜிசி நிர்ணயம் செய்த 57 ஆயிரத்து 800 ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், பணியில் இருக்கும் அனைத்து கௌரவ விரிவுரையாளருக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்யக் கோரியும், அனைத்து கௌரவ விரிவுரையாளர் 12 மாத சம்பளம் வழங்க கோரியும், பெண் கௌரவ விரிவுரையாளருக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை வழங்க கோரியும் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் போது இறக்க நேரிடும் கௌரவ விரிவுரையாளருக்கு 25 லட்சம் பணிக்கொடையாக வழங்க கோரியும், அனைத்து கௌரவ விரிவுரையாளருக்கும் பிஎஃப் மற்றும் இபிஎப் வழங்க கோரி தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை உறுதி செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட கண்டனம் முழக்கத்தில், “பராசக்தி பார்க்க நேரம் இருக்கிறது, எங்கள் செய்தி பார்க்க நேரமில்லையா.?உரிமை தொகை கொடுக்க நிதி உள்ளது. சம்பளம் கொடுக்க நிதி இல்லையா.? என்று முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version