மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் துவக்க விழா நடைபெற்றது :-
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 31-வது வார்டில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரச்சார தெருமுனை கூட்டம் துவக்க விழா நடைபெற்றது. நகரப் பொருளாளர் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் சுந்தர முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு , அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் , மாநில செயற்குழு உறுப்பினர் சாய் சுரேஷ் , செய்தி தொடர்பாளர் தங்க வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 16 சதவீதம் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக பொதுமக்களிடம் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் சாதனைகள் பற்றியும் எடுத்துரைத்த நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அப்போது அவர்கள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை நகரத்தில் மொத்தம் 24 பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

















