சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணியை மேற்கொண்டனர்.

24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டனர்.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஃபேரா சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணி மேற்கொண்டனர்.
தொடர்ந்து மதிய உணவு இடைவேலையின்போது அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சாரம் நடந்தது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்,அனைத்து நிலை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம்,தனி ஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும்,கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்,பொதுமக்களுக்கான பணியை சிறப்புடன் மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் கால முறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி முதல் 42 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் 25ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் முடிவு செய்துள்ளதையும், இந்த போராட்டங்களில் பங்கேற்றிடுவது குறித்து பிரச்சாரக் கூட்டம் வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் இளவரசு, மாவட்ட இணை செயலாளர்கள் முருகானந்தம், தரணி, மாவட்ட துணைத்தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்.

Exit mobile version