மயிலாடுதுறையில் காதல் பிரச்சனையில் காதலன் கொலையில் காதலி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியில் உள்ள குமார் என்பவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்த மாலினி (26) என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மாலினி சென்னையில் ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து வருகிறார்.

காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு உள்ள நிலையில் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகள் மாலினி தங்களுக்கு தேவையில்லை என்று எழுதி கொடுத்தனர். மாலினி வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வைரமுத்துவிற்கும் –மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று வைரமுத்துவை சராமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர்.

வைரமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாலினியின் சசோதரர்கள் குணால், குகன் சித்தப்பா பாஸ்கர் மற்றும் சுபாஷ், கவியரசன், அன்புநிதி உள்ளிட்டவர்கள் மீது இறந்த வைரமுத்துவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுபாஷ், கவியரசன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மாலினியின் சசோதரர்கள் குணால், குகன் சித்தப்பா பாஸ்கர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர் சென்னையில் இருந்து ஊர் திரும்பிய காதலி மாலினி தோத்துபோய்விட்டோம் என்று கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காதலன் கொல்லப்பட்ட விவாகரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், காதலியின் தாயார் விஜயா மாற்று சமூகத்தினர் என்பதால் எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும், வைரமுத்துவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என 100 க்கும் மேற்பட்டோர்

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து மயிலாடுதுறை, கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த எஸ் பி ஸ்டாலின், டிஎஸ்பி பாலாஜி போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version