மயிலாடுதுறை அருகே அடியாமங்களம் கிராமத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் வைரமுத்து நேற்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது காதலி மாலினியின் தாயாரான விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி வைரமுத்துவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் மாலினி, வைரமுத்துவின் குடும்பத்தார், சாலை மறியல் போராட்டம் செய்த நிலையில் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு மாலை 3 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலினியின் தாயார் விஜயா மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்று கூறி கொட்டும் மழையையும் பொறுட்படுத்தாமல் இரவிலும் அரசினர் மருத்துவமனை சவக்கிடங்கின் அருகே காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.
பேட்டி வாஞ்சிநாதன் (மாநில துணை பொதுச்செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி)
