திருச்சி :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அமலாக்கத்துறை (ED) ரெய்டு வந்தால், பிரதமர் மோடியை சந்திக்க ஓடுகிறீர்கள்” என கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், “தி.மு.க.வுக்கு யார் எதிர்க்கட்சி ? அ.தி.மு.க.வா ? இன்று ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை என அனைத்தும் நடைபெறும் சூழலில், தி.மு.க.வுக்கும் பா.ஜ., மற்றும் காங்கிரஸுக்கும் கொள்கை வேறுபாடு ஏதும் இல்லை. கொடிகள் வேறு என்பதைத்தவிர, செயல் ஒன்றே,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “3 ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டங்களுக்கு செல்லாத முதல்வர் இப்போது ஏன் செல்லுகிறார்? இவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள்; பா.ஜ.வினர் கூட அதைப்போலத்தான் நடந்து கொள்கிறார்கள். இலவசங்களை அறிவிப்பதில் வேறுபாடு இல்லை,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து பேசும் போது, “ED சோதனை வந்தவுடன் பிரதமரை சந்திக்க ஓடுகிறீர்கள். இதற்கென்ன அர்த்தம்? இன்று நாட்டை நிர்வாகம் செய்பவர்கள் யார்? சட்டசபையா, பார்லிமென்டா, இல்லையெனில் நீதிமன்றமா? அனைத்து முடிவுகளும் நீதிமன்றம் எடுப்பதால், மற்றவை தேவையற்றதாகிவிடுகிறது. அப்படி என்றால் அவற்றை கலைத்துவிடலாம்,” எனக் கூறினார்.