கம்யூனிஸ்ட் என்றால் போராட்டம் இம்முறை வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் பேச்சு

கம்யூனிஸ்ட் என்றால் போராட்டம்
ஆனால் ஐந்து ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் போராடவில்லை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை அதிமுக வெற்றி பெற்றதில்லை ஆனால் இம்முறை வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலா ன தேசிய ஜனநாயக கூட்டணி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்
இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆர் காமராஜ் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் பேசுகையில்..
அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால் சொன்னால் கம்யூனிஸ்டுகள் போராட்டத்தை நான் குறை சொல்லவில்லை போராட்ட வாழ்க்கை இருக்க வேண்டியதுதான் கம்யூனிஸ்ட் என்றால் போராட்டம் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் போராட்டமே இல்லாத கம்யூனிஸ்ட்
எடப்பாடி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பணம் வந்து கொண்டே இருந்தது ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிவாரணம் இல்லை இன்சூரன்ஸ் இல்லை
திருத்துறைப்பூண்டியில் அண்ணா திமுக கூட்டணி முதல் முறையாக வெற்றி பெறப்போகிறது
2026 இல் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக போகிறார்
ஒவ்வொருவரும் தான் வேட்பாளர் என்று எண்ணி வெற்றி பெற வேலை செய்ய வேண்டும்
அதிமுக ஆட்சி சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

Exit mobile version