தோஹா :
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் வர்த்தக மோதலால், பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களை சீனாவில் இருந்து மாற்றி மற்ற நாடுகளுக்கு நகர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவும், உலக அளவில் ஐபோன் உற்பத்திக்கான முக்கிய மையமாக மாறும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயற்தொழிலாளர் (CEO) டிம் குக், “அடுத்த மாதம் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவில் ஐபோன்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பது, இந்தியாவுக்குதான் பயனளிக்கிறது. அமெரிக்காவுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. எனவே, ஆப்பிள் நிறுவனத்தினர் அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்,” என டிம் குக்கிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் உங்களை (டிம் குக்கை) மிகச் சிறப்பாக நடத்தி வருகிறேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்தியாவுக்கு உதவ விரும்பினால் பரவாயில்லை. ஆனால், நான் இந்தியாவில் உற்பத்தி செய்யவேண்டும் என்பதைக் கூறவில்லை ; விரும்பவும் இல்லை,” என்றார் ட்ரம்ப்.
இந்த வகையில், உலகில் முன்னணியில் உள்ள டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிளின் எதிர்கால உற்பத்தி திசைகள், உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமன்பாட்டை உருவாக்கும் முக்கியக் காரியமாக மாறியுள்ளது.