தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், தலைமைச் செயலக ஊழியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து முதலமைச்சர் ஸ்டாலினும், அரசுத்துறை அதிகாரிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் பொங்கல் வழங்கினர். முன்னதாகப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து தலைமைச் செயலக ஊழியர்களும் உழைத்து வருவதாகக் கூறினார்.
