புதிய மின்சார சட்ட திருத்த மசோதா 2025 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாலை நேர கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்ட திட்ட மசோதா 2025ஐ திரும்ப பெற வேண்டும்,ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் தனியார்மையத்தை அனுமதிக்க கூடாது,01.02.2023 ல்,வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும்,ஊர் மாறுதல் உத்தரவில் அரசியல் தலையீடு என்ற பெயரில் வாரிய உத்தரவுகளுக்கு மாறாக உத்தரவுகளை வழங்கக்கூடாது,காலி பணியிடங்களை உடனே நிர்பட வேண்டும்,யங் மேன் பணியாளர்களை பல உதவியாளராக பதவி மாற்றம் செய்து 6% ஊதிய உயர்வினை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாலை நேர கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இத்திட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் அனிபா, திட்ட பொருளாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

















