தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியான (TBML) டிபிஎம்எல் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 349 மாணவ மாணவிகளுக்கு பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் மடிக்கணினி வழங்கினார்.
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட பொறையார் டி.பி.எம்.எல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இக்கல்லூரியில் பயிலும் 349 மாணவ- மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

















