விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒலக்கூர் ஒன்றியம் பாங்குளத்தூர் கிராமத்தில் கட்டுமான அணி மாவட்ட செயலாளர் மற்றும் பி ஆர் எம் பவுண்டேஷன் தலைவர் திரு முருகேசன் தலைமையில் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் திரு எட்டியப்பன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற கட்டுமான அணி கிளை திறப்பு விழா கூட்டத்தில் கலந்துகொண்ட நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் மாநில பொதுச்செயலாளர் ஆலங்குப்பம் பாலா கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாலா அவர்கள் பேசுகையில் NFITU தொழிற்சங்கத்தின் மூலம் எண்ணற்ற சலுகைகள் வழங்கி வருகிறது அதில் பி ஆர் எம் பவுண்டேஷன் மூலம் அனைவருக்கும் நலவாரிய சேவைகளை ஒரு ரூபாய் காசு கூட வாங்காமல் இலவசமாக நல வாரிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று பெருமையாக குறிப்பிட்டிருந்தார் இந்த பாங்குளத்தூர் கிராமத்தில் தான் பி ஆர் எம் பவுண்டேஷன் தலைவர் இருந்து வருகிறார் என்று பெருமையாக பேசி இருந்தார் பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு புத்தாண்டு வாழ்த்துக்களையும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கட்டுமான அணி பொறுப்பாளர்கள் பிரியா தாமோதரன் ராஜேந்திரன் பெருமாள் மதன் தேவன் பரமசிவம் பஞ்சநாதன் குத்தூஸ் கான் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

















