‘வி.பி ஜி ராம் ஜி’ 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா என எக்ஸ் வலைதள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது, சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல், அலைக்கழித்த பிஜேபி அரசு, இப்போது ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? என்றும் வினவியுள்ளார்.
உண்மையைச் சொன்னால், ஒரு நாள் வேலைக்குக் கூட இனி, மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல், கடமையைக் கைகழுவியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே என்ன ஆனது? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே என்றும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மீது 40 சதவீதம் நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும், முட்டுகளையாவது தவிர்க்கலாம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
