சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கு – அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், அவர்களுக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரம் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரியாற்றி வரும் சிவகாமசுந்தரி என்பவரிடம் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், நல்லூர் வட்டார கணக்கு உதவியாளர் சத்தியா இருவரும் சில காசோலைகளில் கையெழுத்து கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்த காரணத்தாலும், அரசு வாகனத்தை வட்டார கணக்கு உதவியாளர் அவரது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இருவரும் சேர்ந்து மருந்தாளுர் சிவகாமசுந்தரிக்கு பணி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊழியர் விரத போக்கில் ஈடுபட்டு வரும் வட்டார மருத்துவ அலுவலர், வட்டார கணக்கு உதவியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் புதுப்பட்டினம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமிற்கு சென்ற மருந்தாளுநர் சுரேந்திரநாத் ஜவகரை தாக்க முற்பட்டு, மரியாதை குறைவாக பேசிய வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் அவருக்கு உடந்தையாக செயல்படும் மாவட்ட சுகாதார அலுவலர் அஜித்பிரபுகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version