வங்க கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்திருக்கின்றனர்.
வங்க கடலுக்கு மீன் பிடிக்கசெல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி, கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரத்தை சேர்ந்த ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான படகில், 12 மீனவர்கள் இன்று அதிகாலை, தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, அவர்களை சிறைப்பிடித்தனர். இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மீனவர்கள், சிறைப்பிடிக்கப்பட்ட படகையும், மீனவர்களையும் மீட்டுத் தரவேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

















