உரிய அனுமதி பெற்று கண்டிப்பாக சந்திப்பேன் – விஜய் உறுதி

சட்டரீதியான அனுமதி கிடைத்ததும், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பேன் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று, அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வாரம் உங்களுடனான துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம் என்றும் விஜய் கூறியுள்ளார்.

ஏற்கனவே அறிவித்தபடி குடும்ப நலநிதியாக 20 லட்சம் ரூபாயை வங்கியின் ஆர்டிஜிஎஸ் வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

Exit mobile version