கந்த சஷ்டி திருவிழா – இன்று சூரசம்​ஹாரம்

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோவிலில், கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​து வருகின்றனர்.

கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோவி​லில் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. திருவிழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது.

பிற்​பகல் 2 மணிக்கு மேல், திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​தில் சுவாமி ஜெயந்​தி​நாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை​பெறும். மாலை 4.30 மணி​யள​வில் சுவாமி ஜெயந்​தி​நாதர் சூரசம்​ஹாரத்​துக்​காக கடற்​கரையில் எழுந்​தருள்​கிறார்.

தொடர்ந்​து, கஜ முகம், சிங்க முகம் மற்​றும் சுயரூபத்​தோடு வரும் சூரபத்​மனை வதம் செய்​கிறார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சுமார் 4 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு தூத்​துக்​குடி மாவட்​டத்​துக்கு இன்று உள்​ளூர்​ விடு​முறை விடப்பட்​டுள்​ளது.

Exit mobile version