கோலாகலமாக தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு!

மதுரையில் இந்து முன்ணணி சார்பில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். மதுரை வண்டியூர் அருகே, அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன், உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

ஏராளமான மக்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.இதையொட்டி சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள புடைசூழ முதல் ஆளாக வந்துசேர்ந்தார் மத்திய இணை அமைச்சர் L.முருகன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்கும் வகையில், மாநாடு நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version